தசாவதாரம் MORE EXCLUSIVE STILLS
(தமிழ் சினிமா நிருபர் குழுவின் சினிமா செய்தி சேவை குறித்து உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!)
2008-05-31
தெலுங்கு படத்தில் நடிக்க தமிழ் நடிகருக்கு தடை
சூட்டிங்கிற்கு டிமிக்கி கொடுத்த தமிழ் நடிகருக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்லம்... ஐ லவ் யூ... என்று யாராவது சொன்னால்... நடிகர் பிரகாஷ் ராஜ்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு கேரக்டருடன் ஒன்றி நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்...! என்ற பழமொழியை நன்கு உணர்ந்திருக்கிற பிரகாஷ் ராஜுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஏக கிராக்கி. அவரது நடிப்பை இந்த மும்மொழி திரை ரசிகர்களும் ரசிக்கிறார்கள்.
இதனால் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பிஸியாக இருக்கிறார் பிரகாஷ் ராஜ். ஒரே நேரத்தில் இப்படி பல படங்களில் நடித்து வருகிறீர்களே... குழப்பமாக இருக்காதா? என்று முன்பொரு முறை நான் பிரகாஷ் ராஜிடம் கேட்டேன். அதற்கு அவர், கால்ஷீட்களை ஒதுக்குவதில் குழப்பம் இல்லையென்றால் நடித்து கொடுப்பதிலும் குழப்பம் இருக்காது என்று பதிலளித்தார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கால்ஷீட் பிரச்னையில் சிக்கியுள்ளார். அவர் சொன்ன தேதியில் சரியாக படப்பிடிப்புக்கு செல்வதில்லை என்று பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சிலில், கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் செய்தன. இதையடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் மீண்டும் பிரகாஷ்ராஜ் மீது அதே புகார் எழுந்தது.
இதையடுத்து தெலுங்கு தயாரிப்பு கவுன்சில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் பிரகாஷ் ராஜ் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் இதனால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை அணுக வேண்டாம். என்று கூறப்பட்டுள்ளது.
கால்ஷீட் பிரச்னையால் ஏற்கனவே நடிப்புக்கு தடை போட்டபோது பிரகாஷ்ராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற வதந்தியை பரப்பி, பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார். இந்த முறை என்ன செய்யப்போகிறாரோ?
(தமிழ் சினிமா நிருபர் குழுவின் சினிமா செய்தி சேவை குறித்து உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!)
Labels:
prakash raj
2008-05-30
தசாவதாரம் தள்ளிப்போவது ஏன்? ஸ்பெஷல் ரிப்போர்ட்
தசாவதாரம் தள்ளிப்போவது குறித்து எக்ஸ்குளூசிவ் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கமல்ஹாசன் 10 அவதாரம் எடுக்கும் தசாவதாரம் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் பட ரீலிஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் தள்ளிப்போவது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. கோர்ட்டில் அளித்துள்ள உறுதியை காப்பாற்றுவதற்காக படத்தில் சில மாற்றங்கள் செய்வதால்தான் தசாவதாரம் மீண்டும் தள்ளிப்போகிறது என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதுபற்றி ஆஸ்கார் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். அவர் பல்வேறு எக்ஸ்குளூசிவ் தகவல்களை நம்மிடம் தெரிவித்தார். தசாவதாரம் குழுவினர் கோர்ட், கேஸ் என்று அலைந்ததால் இறுதிகட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு இன்னமும் டப்பிங் பணிகள் நடைபெறவில்லை. இப்போதுதான் அதற்கான பணி துவங்கவிருக்கிறது. படத்தின் சில கிராபிக்ஸ்களில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் படம் ரீலிஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலில் கமல் சார் தலையிட்டு சில கிராபிக்ஸ்களில் மட்டும் மாற்றம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். கோர்ட்டில் உறுதியளித்தபடி சர்ச்சைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் சில காட்சிகளை மாற்றும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள்அனைத்தும் மும்பையில் நடந்து வருகிறது, என்றார்.
கண்டிப்பாக ஜுன் 12ம் தேதி படம் வருமா? என்று அந்த நிர்வாகியிடம் கேட்டதற்கு, ரசிகர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வரும் என்றார் பொத்தாம்பொதுவாக...! கமல்ஹாசனை தொடர்பு கொள்ள முன்றோம். அவர் நம்மிடம் சிக்கவில்லை.
(சினிமா நிருபர் குழுவின் சினிமா செய்தி சேவை குறித்து உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!)
Labels:
dasavatharam,
Special report
மீண்டும் தள்ளிப்போகிறது தசாவதாரம்
உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான கெட்டப்களில் பட்டையை கிளப்பியிருக்கும் படம் தசாவதாரம். இந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகள், வழக்குகளை கடந்து தசாவதாரம் படம் ரீலிசுக்கு தயாராகி விட்டது. முதன் முறையாக தமிழ்நடிகர் ஒருவர் 10 அவதாரம் எடுக்கவிருப்பதால் கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் தசாவதாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வருகிற ஜுன் 6ம் தேதி தசாவதாரம் ரீலிஸ் ஆகும் என்று கடந்த வாரம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தசாவதாரம் ரீலிஸ் மேலும் ஒரு வாரம் தள்ளிப்போகிறது. (இதுபற்றி ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டுள்ளோம்).
தசாவதாரம் ரீலிஸ் குறித்து ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, தசாவதாரம் படத்துக்கு தமிழ், தெலுங்கு, இந்தியில் ஆயிரத்துக்கும் அதிகமான பிரிண்ட்டுகள் போடவேண்டியுள்ளது. அதற்கு சில நாட்கள் பிடிக்கும் என்பதால் ரீலிஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
Labels:
dasavatharam,
kamalhasan
பழம்பெரும் நடிகை முத்துலட்சுமி உடல் தகனம்
தூத்துக்குடியை சேர்ந்தவர் டி.பி.முத்துலட்சுமி (வயது 77). 1948ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்த இவர் வீரபாண்டிய கட்டப்பொம்மன், அன்பே வா, நவராத்திரி, நாடோடி மன்னன் உள்பட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பொன்முடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய முத்துலட்சுமி காலப்போக்கில் நகைச்சுவை நடிகையாக மாறினார். அந்தக்கால நகைச்சுவையில் தனக்கென தனி பாதை அமைத்து நடித்து பெயர்பெற்ற முத்துலட்சுமி, பழம்பெரும் நடிகர்களான எம்.ஆர்.ராதா, தங்கவேலு, டி.எஸ்.பாலையா உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருது, பரிசுகளை பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முத்துலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முத்துலட்சுமி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முத்துலட்சுமி தனது இயல்பான நகைச்சுவை நடிப்பால் ரசிக பெருமக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர், என்னுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தவர், பழகுவதற்கு இனிமையானவர் என்று கூறியுள்ளார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முத்துலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முத்துலட்சுமி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முத்துலட்சுமி தனது இயல்பான நகைச்சுவை நடிப்பால் ரசிக பெருமக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர், என்னுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தவர், பழகுவதற்கு இனிமையானவர் என்று கூறியுள்ளார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
குசேலன் ரீலிஸ் எப்போது? : பி.வாசு பேட்டி
குசேலன் ரீலிஸ் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் டைரக்டர் பி.வாசு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் குசேலன். இந்த படத்தை டைரக்டர் பி.வாசு இயக்கி வருகிறார். நடிகர்கள் பசுபதி, வடிவேலு, நடிகைகள் நயன்தாரா, மீனா உள்பட பலர் குசேலனில் நடித்து வருகிறார்கள்.
குசேலன் சூட்டிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ரீலிஸ் தேதி குறித்து டைரக்டர் பி.வாசுவிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:-
குசேலன் படத்தை ஆரம்பத்தில் சிறிய அளவில்தான் எடுக்க நினைத்தோம். ரஜினிகாந்த்திடம் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்குமாறு முதலில் கேட்டுக் கொண்டேன். அவரும் உடனடியாக நடிக்க சம்மதித்தார். பின்னர் கதையை கேட்ட பின்னர் ஆர்வத்துடன் சூட்டிங்கில் பங்கேற்றார். அவர் அதிக ஆர்வம் கொண்டதால் மலையாள கதபறயும்போள் கதையை கொஞ்சம் மாற்றி, ரஜினிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்தோம். அதன்படி கதை மாற்றப்பட்டது.
குசேலன் படத்தின் சூட்டிங் ஐதராபாத், பொள்ளாச்சி, கோபிசெட்டி பாளையம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. இறுதிகட்ட சூட்டிங் போய்கொண்டிருக்கிறது. ரீலிஸ் தேதி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகி்ன்றன. ஆனால் நாங்கள் இதுவரை தேதியை முடிவு செய்யவில்லை.
குசேலன் சூட்டிங்கை ஜூன் 15ம் தேதிக்கு முன் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஜூன் 15ம்தேதி பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறேன். அப்போது ஆடியோ வெளியீடும் தேதி மற்றும் குசேலன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Labels:
Kuselan
குசேலன் ஆடியோ ரெக்கார்டிங் ஸ்பாட் கேலரி
ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் படத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும் செய்தியாகி விடும். அதுவும் ரஜினிகாந்த் மிகவும் ஆர்வத்துடன் நடிக்கிறார் என்றால் சும்மாவா?. குசேலன் படத்தின் சூட்டிங் தற்போது மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஆடியோவும் தயாராகிவிட்டது. இந்த படத்தில் முதன் முறையாக பிரபல இந்தி பாப் பாடகர் தலேர் மெஹந்தி பாடடியுள்ளார்.
முதன் முறையாக தமிழ் படமொன்றில் தலேர் மெஹந்தி பாடியிருக்கிறார், அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில் என்பதால் ஆடியோ ரெக்காடிங் தியேட்டரில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே வெளியிட்டுள்ளோம். பார்த்து ரசித்து விட்டு கருத்து சொல்லுங்கள் வாசகர்களே...!
முதன் முறையாக தமிழ் படமொன்றில் தலேர் மெஹந்தி பாடியிருக்கிறார், அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில் என்பதால் ஆடியோ ரெக்காடிங் தியேட்டரில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே வெளியிட்டுள்ளோம். பார்த்து ரசித்து விட்டு கருத்து சொல்லுங்கள் வாசகர்களே...!
Labels:
Kuselan,
rajinikanth,
shooting spot
நடிகைக்கு முகப்பரு : சூட்டிங் கேன்சல்
நடிகை ஒருவரின் முகத்தில் முகப்பரு தோன்றியதால் சினிமா சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்திருப்பது கோலிவுட்டில் அல்ல... பாலிவுட்டில்...!
மகேஷ் பட் தயாரிப்பில் டைரக்டர் விக்ரம்பட் இயக்கிய படம் ராஸ். இதில் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகமான ராஸ் 2 படம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. டைரக்டர் மொத்சூரி இந்த படத்தை இயக்குகிறார். ராஸ் பார்ட் 2 வில் நடிகை கங்கனா ரனவ்த் நடிக்கிறார்.
இந்த படத்தில் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை கங்கானா தொடர்புடைய ஒரு காட்சி படமாக்கப்படவிருந்தது. இதற்காக நடிகை கங்கானா வந்தார். மேக்கப் முடிந்து கேமரா முன்பு வந்து நின்ற கங்கானாவின் முக்கத்தில் முகப்பரு வந்திருந்தது. இதை கவனித்த டைரக்டர் மொத்சூரி, உடனடியாக சூட்டிங்கை நிறுத்தினார். முகப்பருவுடன் நடிக்க வேண்டாம் என்று கங்கானாவிடம் கூறிய சூரி, பொலிவான முகம்தான் எனக்கு தேவை என்றார். இதுபற்றி கங்கானாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, வெயில் காலம் என்பதால் முகத்தில் முகப்பருக்கள் வந்து விட்டன. டாக்டரிடம் சிகிச்சை பெறப்போகிறேன். முகப்பரு சரியானதும் சூட்டிங்கில் பங்கேற்பேன், என்றார்.
2008-05-29
6ம் வகுப்பில் ரஜினி பற்றிய பாடம்
கர்நாடக மாநிலத்தில் பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சிவாஜிராவ் கெய்க்வாட், இன்று அகில உலகமும் போற்றும் சூப்பர் ஸ்டாராக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். அவரது முன்னேற்றப் பாதையை பலரும் பறை சாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் பள்ளிப் பாட புத்தகமும் புகழ் பாடப்போகிறது.
ஆறாம் வகுப்பு சி.பி.எஸ.சி. பாடப்புத்தகத்தில், செய்யும் தொழிலில் பெருமிதம் என்ற தலைப்பிலான பகுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நிலையை உயர்த்திக் கொண்ட காலக்கட்டத்தின் நிகழ்வு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பாடத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம் வருமாறு:-
கடந்த 1970களில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த் (அப்போது சிவாஜி ராவ்) தனது நண்பர் பகதூருடன் சினிமாவுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது நாடகங்கள் சிலவற்றில் நடித்த ரஜினியின் ஆர்வத்தையும் ஆற்றலையும் கண்டுகொண்ட பகதுர், சினிமாவுக்கு முயற்சி செய்யுமாறு ரஜினிக்கு ஊக்கமளித்தார்.
பகதுரின் வலியுறுத்தலுக்கு இணங்க, சென்னையிலுள்ள திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார் ரஜினி. 1974 முதல் 1976 வரை பகதுரின் பண உதவியுடன் படிப்பை முடித்த ரஜினி, இயக்குனர் கே.பாலச்சந்தரின் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு நடந்தவற்றை உலகமே அறியும். தற்போது ரஜினிகாந்த் சினிமா துறையின் மூலம் உலக அளவில் புகழ்பெற்று விளங்கினாலும், தனது பழைய வாழ்க்கையையும், தாம் செய்த வேலைகளையும் மறவாமல் இருக்கிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த படத்தின் கடைசியில், செய்யும் தொழில் எதுவானாலும், அதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி கருத்து கேட்பதற்காக சூப்பர் ஸ்டாரை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.
Labels:
rajinikanth
தசாவதாரம் எக்ஸ்குளூசிவ் ஸ்டில்ஸ் MORE
தசாவதாரம் படத்தின் ஸ்டில்கள் நமக்கு எக்ஸ்குளூசிவ்வாக கிடைத்துள்ளன. அவற்றை உங்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம். பார்த்து ரசியுங்கள் ரசிகர்களே...!
Labels:
dasavatharam,
Movie Gallery
தசாவதாரம் எக்ஸ்குளூசிவ் ஸ்டில்ஸ்
தசாவதாரம் படம் ஜுன் 6ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரீலிஸ் தேதி மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தசாவதாரம் படத்தின் ஸ்டில்கள் நமக்கு எக்ஸ்குளூசிவ்வாக கிடைத்துள்ளன. அவற்றை பார்த்து ரசியுங்கள் ரசிகர்களே...!
(குறிப்பு : நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகளை தினமும் குறைந்தது 100 பேராவது பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பின்னூட்டமிடுகிறார்கள். செய்திகளை படிக்கும் வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களையும் பின்னூட்டமிட்டால் நமது நிருபர் குழுவிற்கு உற்சாகமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.)
(குறிப்பு : நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகளை தினமும் குறைந்தது 100 பேராவது பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பின்னூட்டமிடுகிறார்கள். செய்திகளை படிக்கும் வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களையும் பின்னூட்டமிட்டால் நமது நிருபர் குழுவிற்கு உற்சாகமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.)
Labels:
dasavatharam,
Movie Gallery
நிருபரின் டைரியி்ல இருந்து நடிகர்களின் முகவரிகள்
நிருபரின் டைரியில் இருந்து தமிழ் சினிமா நடிகர்கள் சிலரது முகவரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அளிக்கும் பின்னூட்டத்தைப் பொறுத்து மற்ற நட்சத்திரங்களின் முகவரிகளும் அவ்வப்போது வழங்கப்படும்.
RAJINIKANTH
18, Ragaveera avenue,
Poes Gardent,
Chennai- 600086
VIJAYAKANTH
12A, Kannammal Street
Kannabiran Colony,
Saligramam,
Chennai - 600 093.
KAMALHASAN
63, Luz Church Road,
Mylapore,
Chennai 600 004.
VIKRAM
18, Murali St,
Mahalingapuram,
Chennai 600 034
VIJAY
64, Kaveri Street,
Saligramam,
Chennai - 600 093.
AJITHKUMAR
5, Vijayalakshmi Street,
Mahalingapuram,
Chennai 600 034.
DANUSH
16/5, Rajamannar Salai,
T Nagar,
Chennai 600 017
ARJUN
B-3, C Block, 4th Floor,
109, G.N.Chetty Road,
T.Nagar,
Chennai 600 017
JEYAM RAVI
7/6, Vedammal Avenue,
Dr.Subbarayan Nagar,
Kodambakkam,
Chennai-24
SHAM
Flat No. 3C,
Aasha Apartments,
No. 55, Pulla avenue,
Thiruvika palace,
Shenoy Nagar,
Chennai 600 030
RAJINIKANTH
18, Ragaveera avenue,
Poes Gardent,
Chennai- 600086
VIJAYAKANTH
12A, Kannammal Street
Kannabiran Colony,
Saligramam,
Chennai - 600 093.
KAMALHASAN
63, Luz Church Road,
Mylapore,
Chennai 600 004.
VIKRAM
18, Murali St,
Mahalingapuram,
Chennai 600 034
VIJAY
64, Kaveri Street,
Saligramam,
Chennai - 600 093.
AJITHKUMAR
5, Vijayalakshmi Street,
Mahalingapuram,
Chennai 600 034.
DANUSH
16/5, Rajamannar Salai,
T Nagar,
Chennai 600 017
ARJUN
B-3, C Block, 4th Floor,
109, G.N.Chetty Road,
T.Nagar,
Chennai 600 017
JEYAM RAVI
7/6, Vedammal Avenue,
Dr.Subbarayan Nagar,
Kodambakkam,
Chennai-24
SHAM
Flat No. 3C,
Aasha Apartments,
No. 55, Pulla avenue,
Thiruvika palace,
Shenoy Nagar,
Chennai 600 030
Labels:
Actress Address
கண்தானம் செய்தார் நடிகை லைலா
தனது கன்னக்குழியழகு மூலம் தமிழ் ரசிகர்களை சொக்க வைத்தவர் நடிகை லைலா. இவரது குழந்தைத்தனமான நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது. இப்போது திருமணமாக ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதை கொஞ்ச காலம் தள்ளி வைத்திருக்கிறாராம் லைலா.
கோலிவுட்டில் பிஸியான நடிகையாக இருந்த நேரத்தில் பொதுநல நோக்குடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வந்த நடிகை லைலா, சமீபத்தில் கண்தானம் செய்திருக்கிறாராம். மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க லைலா தூது விடுகிறார் என்ற செய்தி கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதுபற்றி விசாரிப்பதற்காக போனில் தொடர்பு கொண்டோம். அப்போது அவர், தூது விட்ட செய்தியை மறுத்தார். மேலும் லைலா கூறுகையில், நான் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறேன். எனது மகனை கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. அவன் இன்னும் பெரியவன் ஆன பிறகு வேண்டுமானால் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார்.
வேறு ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்டபோது கண்தானம் செய்த விஷயத்தை தெரிவி்த்தார் லைலா. கடந்த மாதம் சுவாமி சுகபோதானந்தா பிறந்த நாளில்தான் லைலா கண்தானம் செய்திருக்கிறார். மும்பையில் உள்ள ஆதித்யா ஜியோத் கண் மருத்துவமனைக்கு கணவர் மற்று்ம் குழந்தையுடன் சென்ற லைலா, கண்களை தானம் செய்தாராம்.
கண்தானம் செய்தபோது எடுத்த படத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன லைலா, நமது இமெயில் முகவரியில் அனுப்பிய படத்தை வாசகர்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளேன்.
Labels:
Laila
2008-05-28
மீண்டும் வம்பில் சிக்குகிறார் சிம்பு!
நடிகர் சிம்பு என்ற சிலம்பரசன் மீண்டும் வம்பில் சிக்கப் போகிறார்.
தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வம்பையும் குத்தகைக்கு எடுத்ததுபோல செயல்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது சிலம்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் புதுமுக நாயகி சலோனி, சினேகா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தனது அடுத்த கால்ஷீட்டை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட்டுக்கு கொடுத்திருக்கிறார் சிம்பு. போடா, போடி! என்ற தலைப்பில் உருவாகவுள்ள இப்புதிய படத்தை இயக்குபவர் டைரக்டர் விக்கி.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது. மரியாதை குறைவான இந்த தலைப்பை சேம்பர் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சிம்பு படம் என்பதால் இப்படி வம்பு தலைப்பை தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது வம்பு தலைப்பு என்பதால் சிம்பு நடிக்கிறாரா? என்பது கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற கேள்வி போல முற்றுபெறாமல் சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருக்கிறது.
Labels:
simbhu
சினிமா ஆசை காட்டி பெண்ணிடம் மோசடி : அசின் மீது புகார்
சினிமா ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி செய்தததாக நடிகை அசின் மீது சென்னை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகாரை நடிகை அசின் மறுத்துள்ளார்.
நடிகை அசின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். தற்போது இந்தி கஜினி பட சூட்டிங்கில் இருப்பதால் கடந்த டிசம்பர் மாதம் முதல் மும்பை போய் குடியேறி விட்டார். சென்னை வீட்டில் இருந்தபோது தேனாம்பேட்டையை சேர்ந்த பியூலா என்ற 20 வயது இளம்பெண் அசின் வீட்டில் வேலை செய்து வந்தார். அவரும் தற்போது அசினுடன் மும்பை சென்று விட்டார்.
இந்நிலையில் இளம்பெண் பியூலாவின் தாயார் நர்சம்மா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது மகள் பியூலாவை நடிகை அசின் கொடுமை படுத்துகிறார். பியூலாவை பார்க்க அசின் வீட்டார் என்னை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி என் மகளை ஏமாற்றி வைத்துள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லாததால், நான் இறப்பதற்குள் எனது மகளை பார்க்க விரும்புகிறேன். போலீசார்தான் எனது மகளை மீட்டுத்தர வேண்டும்,என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் நடிகை அசினிடமும், அசின் குடும்பத்தாரிடமும் போனில் விசாரணை நடத்தினர். அப்போது அசின் விரைவில் சென்னைக்கு வரவிருப்பதாகவும், அப்போது பியூலாவை அழைத்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் சென்னை வந்த பிறகு அசினிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த புகார் குறித்து நடிகை அசினிடம் போனில் விசாரித்தோம். அப்போது அவர் கூறுகையில், பியூலா எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். நல்லபடியாகத்தான் இருக்கிறார். அவரது தாயார் கவலைப்பட வேண்டாம். எனக்கு யாரையும் ஏமாற்றியோ, கொடுமைப்படுத்தியோ பழக்கமில்லை. இப்போது மும்பையில் இந்தி கஜினி சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அது முடிந்த பின்னர் சென்னை வருவேன். பியூலாவும் என்னுடன் வருவார். இரண்டு மாதங்களுக்கு முன்பே பியூலாவை சென்னைக்கு போய்விட்டு வருகிறாயா? என்று கேட்டேன். ஆனால் அவர்தான், நீங்க போகும்போது சேர்ந்து போவோம் என்று கூறிவிட்டார். வேண்டுமானால் பியூலாவிடமே கேளுங்கள் என்று கூறி பியூலாவிடம் போனை கொடுத்தார்.
பியூலா நம்மிடம் பேசுகையில், நான் லாஸ்ட் டிசம்பர்ல சென்னைல இருந்து அசின் மேடம் கூட மும்பை வந்தேன். அப்புறம் வீட்டுக்கு போகவில்லை. அம்மாவுக்கு சம்பளத்தையும் அனுப்பவில்லை. அதனால்தான் அம்மா இப்படி புகார் கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அம்மாவிடம் நான் வாரம் ஒருமுறையாவது போனில் பேசுவேன். இங்கு நான் நல்லபடியாக இருக்கிறேன். என்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று அசின் மேடம் சொன்னதில்லை. என்னை அவர் அடைத்து வைத்திருக்கவும் இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன், என்றார்.
Labels:
asin
2008-05-27
கண்களை குளிர்விக்கும் உளியின்ஒசை பட ஸ்டில்கள்
முதல்வர் கருணாநிதி கதையில் உருவாகி வரும் படம் உளியின் ஒசை. இந்த ராஜராஜ சோழன் காலத்து கதையான இந்த கதை வரலாற்றை பறை சாற்றும் வகையில் படமாக்கப்பட்டு உள்ளது. டைரக்டர் இளவேனில் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. உளியின் ஓசை படத்தின் ஸ்டில்கள் பார்ப்பதற்கு கலக்கலாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த கவர்ச்சி படைப்பின் ஸ்டில்கள் வாசகர்களின் பார்வைக்காக...!
Labels:
Movie Gallery
இந்தியில் தமிழ் நடிகரின் மார்க்கெட் உயர்வு
ஒரு தமிழ் சினிமாவில் நடிக்க ரூ.75 லட்சம் வரை சம்பளம் பெற்று வரும் நடிகர் மாதவனின் மார்க்கெட் இந்தியில் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தமிழில் யாவரும் நலம், குரு என் ஆளு படங்களில் நடிக்கும் நடிகர் மாதவன், இந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அடுத்து, அமீர்கான் கவுரவ வேடம் ஏற்கும் மற்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவ்விரு படம் தவிர இன்னொரு படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ள மாதவன், இந்தியில் ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
இதற்கிடையில், நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஜோடியாக மாதவன் நடிக்க இருந்த என்றென்றும் புன்னகை படம் கைவிடப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி மாதவனிடம் போனில் கேட்டோம். ஸ்ருதியுடன் இணைந்து நடிக்க நான் தயாராகத்தான் இருந்தேன். இருப்பினும் ஏனோ சில காரணங்களை சொல்லி படத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நான் தற்போது தமிழிலும், இந்தியிலும் பிஸியாகத்தான் இருக்கிறேன். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை, என்றார்.
Labels:
Madhavan
குசேலன் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்....
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் குசேலன். இந்த படம் தமிழில் குசேலன் என்ற பெயரிலும், தெலுங்கில் குசேலடு என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது. நயன்தாராவுடன் டூயட் பாடலில் ஆடும் காட்சிக்காக கேரளா செல்லவிருக்கிறார் சூப்பர் ஸ்டார். பசுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் இன்னும் பாக்கியுள்ளதாம். இந்நிலையில் ஜூன் 20ம் தேதி குசேலன் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சென்னையிலும், ஐதராபாத்திலும் ஒரே நாளில் ஆடியோவை வெளியிட வேண்டும் என்பது ரஜினியின் ஆசையாம்.
அதே நேரத்தில் ரஜினியின் இன்னொரு ஆசையும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தீபாவளி தினத்தில் குசேலன் படத்தின் வெற்றிகரமான 100வது நாள் என்று மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18ம் தேதி குசேலனை திரையிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் டைரக்டர் பி.வாசு.
இதுபற்றி வாசுவிடம் கேட்டதற்கு, குசேலன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆடியோ ஏற்கனவே தயாராகி விட்டது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பாடல்களாக இருக்கும். ஆடியோ வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்பட்டும். படம் ரீலிஸ் தேதி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக ஜூலை மாதத்தில் ரீலிஸ் ஆகும், என்றார்.
Labels:
Kuselan,
rajinikanth
கிசுகிசுவும், தளபதி நடிகரின் பதிலும்
தமிழ் சினிமா செய்திகளுக்கான வலைதளம் ஒன்றில், கிசுகிசு பகுதியில் ஒரு முன்னணி நடிகரைப் பற்றிய கிசுகி இடம்பெற்றிருக்கிறது. அந்த கிசுகிசு வருமாறு:-
தளபதியின் சாலிகிராம வீடு வாஸ்துபடி தயாராகி வருகிறது. கடற்கரையோரம் தனியாக போனபின் அடிக்கடி பாட்டிலை ஓபன் செய்து ஏகாந்தத்துக்கு தாவி வருகிறாராம். கிராமத்து வீட்டுக்கு வந்தால் தட்டிக் கேட்க அம்மா, அப்பா உண்டு. தளபதியின் திருமதியின் ஐடியாவாம் இது.
இந்த கிசுகிசு குறித்து சம்பந்தப்பட்ட தளபதி நடிகரிடம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த தளபதி, என்னங்கண்ணா... இந்த மாதிரி என் நேமை டேமேஜ் பண்ற கிசுகிசுக்கெல்லாம் எப்டிங்கண்ணா பதில் சொல்றது. ஒரு நடிகர் வீடு மாறுறதைக்கூடவா இப்படி எழுதுவாங்க...! என்றார் வேதனையுடன்.
நாம் விசாரித்த வரை... சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் இன்டீரியர் டெகரேஷன் வேலைகள் நடந்து வருவதால்தான் தளபதி கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள பங்களாவுக்கு குடியேறினாராம். இப்போது வீட்டு வேலைகள் முடிந்து விட்டதால் மீண்டும் சாலி கிராமத்துக்கு வந்து குடியேறவிருக்கிறார். சாலிகிராமம்தானே கோலிவுட்டின் வசந்த கிராமம்.
Labels:
kisu kisu
2008-05-26
சிவாஜி ரஜினி கெட்டப்பில் விஷால்
மலைக்கோட்டை படத்துக்கு பிறகு நடிகர் விஷால் நடித்து வரும் படம் சத்யம். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகை நயன்தாரா. பில்லா படம் அளவுக்கு இல்லையென்றாலும் இந்த படத்திலும் நயனின் கவர்ச்சி ரசிகர்களை சூடேற்றும் என்பதில் ஐயமில்லை. படத்தில் விஷால் பொறுப்பான இளம் போலீஸ் அதிகாரியாகவும், நயன்தாரா நிருபராகவும் நடிக்கிறார்.
டைரக்டர் ராஜசேகர் படத்தை இயக்குகிறதர். படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் சென்னையில் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறுவது போன்று காட்சியமைக்கப்படுகிறது. இந்த கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்களுடன் மொட்டைத் தலையுடன் விஷால் மோதுவது போல் படமாக்கப்படவுள்ளது.
சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொட்டைத் தலையுடன் வந்து அசத்தியிருப்பார் .அதேபோலவே விஷாலுக்கும் கெட்டப் போட்டார்களாம். சிவாஜி அளவுக்கு சத்யமும் பேசப்படும் என்பது டைரக்டர் ராஜசேகரின் கூற்று.
சத்யம் குறித்து ராஜசேகரிடம் கேட்டபோது, சத்யம் படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திராதான் வில்லன். தொடர் கொலைகள் செய்யும் உபேந்திராவை துரத்தி பிடிக்கிற அதிகாரிதான் விஷால். அடுத்தடுத்து பல திருப்பு முனைகளுடன் படம் பரபரப்பாக இருக்கும், என்றார்.
சத்யம் படம் தெலுங்கில் சல்யூட் என்ற பெயரில் ரீலிஸ் ஆகவிருக்கிறது என்பது கொசுறு தகவல்.
Labels:
vishal
படுக்கையறை காட்சியில் பின்னியெடுத்த நடிகை
புதுமுக நடிகை ஒருவர் தான் சம்பந்தப்பட்ட படுக்கையறை காட்சியில் பின்னியெடுத்து படக்குழுவினரையே கிறங்கடித்து விட்டார்.
ஆலிபிரி மூவீ புரொடக்ஷன்ஸ் சார்பில் திருப்பூர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி தயாரித்து வரும் படம், அடடா என்ன அழகு. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்டு செய்கிறார், டி.எம்.ஜெயமுருகன். இந்த படத்தில், ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கோல் என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.
இரண்டு பேரும் ஆடிப்பாடிய ஒரு கவர்ச்சிகரமான பாடல் காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டது. தீராத காதலிலே தேகமெங்கும் வேகுதடி... என்று தொடங்கும் அந்த காட்சியில், நிக்கோல் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். இரண்டு பேர் சம்பந்தப்பட்ட படுக்கை அறை காட்சியும், பாடலில் இடம்பெற்றுள்ளது. இதில் நடிகை நிக்கோல் தத்ரூபமாக நடித்திருக்கிறாராம். இந்த படத்தில் நிக்கோலின் கவர்ச்சியை பார்த்து அடடா... என்ன அழகு! என்று ரசிகர்கள் கிறங்குவது நிச்சயம் என்கிறது அடடா என்ன அழகு படக்குழு.
இந்த படத்தில் ஜெய் ஆகாஷ்-நிக்கோல் ஜோடியுடன் கருணாஸ், சரத்பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, சிட்டிபாபு, மகாதேவன், சத்யபிரகாஷ், ரேகா, ஐஸ்வர்யா, ஆர்த்தி ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
Labels:
nicole,
shooting spot
2008-05-25
சூட்டிங்கில் விபத்து : நடிகை மிதுனா கால் முறிந்தது
மாமதுரை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மிதுனா. இவர் தற்போது தீயவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதய், ரஞ்சன் ஆகியோர் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள்.
நடிகை மிதுனா, படத்தின் நாயகர்களுடன் சேர்ந்து ஆடுவது போன்ற ஒரு பாடல் தீவயன் படத்தில் இடம்பெறுகிறது. இதற்கான சூட்டிங் சென்னையில் நடந்தது. அப்போது டான்ஸ் ஒத்திகை நடந்தபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து வலியால் அலறி துடித்த நடிகை மிதுனாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக தீயவன் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது.
(நடிகை மிதுனா ரசிகர்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர் என்பதால்தான் தீயவன் படத்தின் சில காட்சிகளையும் இணைத்துள்ளேன்.)
Labels:
shooting spot
பாண்டியில் கவர்ச்சி ஏன்? சினேகா பேட்டி
தனது கன்னக்குழியழகால் ரசிகர்களை கவர்ந்திழுத்த புன்னகை இளவரசி சினேகா, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்... பாடல் மூலம் பிரபலமானார். அவிழ்த்து போட்டு ஆடும் நடிகைகள் மத்தியில் இழுத்து போர்த்திக் கொண்டுதான் நடிப்பேன் என்று சொல்லியதன் மூலம் பல பட வாய்ப்புகளை நழுவ விட்ட சினேகா, கவர்ச்சியால் கிடைக்கும் வாய்ப்பு தேவையே இல்லை, எனது நடிப்புக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்பேன், என்று வீராவேசமாக பேட்டியளித்தார்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... என்று சொல்வது போல சமீபத்தில் வெளியான பாண்டி படத்தில் சினேகா கவர்ச்சி தாண்டவமாடியிருக்கிறார். தொப்புள் தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்டதன் மூலம் தமிழில் சினேகா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
இந்த கவர்ச்சி பற்றி சினேகா என்ன நினைக்கிறார்...? அவரிடமே கேட்டோம்.
புன்னகை சினேகா கவர்ச்சி சினேகா ஆனது ஏன்?
என்னை பொறுத்தவரை கிளாமர் நீண்ட நாட்களுக்கு நிற்காது, குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள் என்பது அசைக்க முடியாத கருத்தாகும். பாண்டி படத்தில் கவர்ச்சி தேவைப்பட்டது. அதனால் நடித்தேன்.
அடுத்தடுத்த படங்களில் இந்த கவர்ச்சி புயல் வீசுமா?
ஒரு படத்தில் கொஞ்சம்(?) கிளாமராக நடித்தேன் என்பதற்காக அடுத்து நடிக்கும் படங்களில் எல்லாம் கிளாமராக நடிக்க முடியுமா? படத்தின் கதையை பொறுத்துதான் எப்படி நடிப்பது என்று முடிவு செய்வேன். அதேநேரத்தில் நான் கிளாமராக நடிப்பதை விட குடும்ப பாங்கான ரோல்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். பிரிவோம் சந்திப்போம் படத்தின் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்திருந்தேன். எனது நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள்.
கிளாமர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உடல் இருக்கும் வரை மட்டுமே கிளாமருக்கு மதிப்பு இருக்கும். ஆனால் நடிப்புத் திறமை இருந்தால், இளமை போன பின்னரும் கூட வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்.
இவ்வாறு சினேகா கூறினார்.
Labels:
sneha
குசேலனுக்கு புதுப்பொலிவு கொடுத்த ரஜினி
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் குசேலன். இந்த படம் கதபறயும் போள் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.
குசேலன் சூட்டிங் தொடங்கியதில் இருந்தே தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது குசேலனுக்கு புதுப்பொலிவு கொடுத்ததே ரஜினிகாந்த் தான் என்ற தகவல் வெளியிகியிருக்கிறது. இதுபற்றி மலையாளத்தில் கதபறயும்போள் படத்தின் கதையை எழுதிய ரஜினியின் நண்பர் நடிகர் சீனிவாசன் கூறுகையில், மலையாள படத்தை விட தமிழில் குசேலன் புதுப்பொலிவுடன் இருக்கும். இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மலையாளத்தில் நான் நடித்த பார்பர் கேரக்டரில் பசுபதி நடித்து வருகிறார். அவருக்கு இந்த படம் நல்ல பெயர் வாங்கி கொடுக்கும். ஆரம்பத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில்தான் நடிப்பார் என்று நினைத்தார்கள். படத்தின் கதையை கேட்க கேட்க ரஜினியே பல மாற்றங்களை செய்து ரொம்ப இன்வால்மெண்ட்டுடன் நடிக்கத் தொடங்கி விட்டாராம். இதை அவரே என்னிடம் போனில் தெரிவித்தார், என்றார்.
Labels:
Kuselan,
rajinikanth
2008-05-24
சிலந்தி டைப்பில் இன்னொரு படம்
சிலந்தி டைப் என்றதுமே உங்களுக்கு புரிந்திருக்கும்... இது முழுக்க முழுக்க கவர்ச்சியான படமாகத்தான் இருக்கும் என்று. சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் பெண்களைப் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்தியை கருவாகக் கொண்டு சிலந்தி படத்தை புதுமுக இயக்குனர் ஆதி இயக்கினார். இந்த படம் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் சூப்பர் ஹிட்.
இதே டைப்பில் அடுத்த வாரம் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் பெயர் தித்திக்கும் இளமை. நரேஷ் நாகா பிக்சர்ஸ் சார்பில் சங்கை சுப்ரமணியம் தயாரிக்கிறார். ஹீரோ தினேஷ், ஹீரோயின்களான நிஷா, அல்தரா மூவரும் நாயகியும் புதுமுகங்கள். லக்ஷயா, மன்சூர் அலிகானும், பாத்திமா பாபுவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் சந்திரமோகன் கூறுகையில், குடும்ப பெண்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து இன்டர்நெட் மற்றும் எம்.எம்.எஸ். மூலம் அனுப்புவதால் ஏற்படும் பிரச்னைதான் படத்தின் கரு. படத்தில் நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறோம். ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளால் ஏற்படும் பிரச்னைகளை விளக்கியிருக்கிறோம். இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் போகும் பாதை தவறானது என்பதை சுட்டிக் காட்டவும் இந்தப் படம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், என்றார்.
இந்த படத்தின் கதையை ஏற்கனவே கோர்ட்டில் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது என்பது கொசுறு தகவல். ரீலிஸ் நேரத்தில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முன் ஏற்பாடாம்.
தனுஷ் குடும்பத்தில் டைரக்ஷன் மோகம்
பொதுவாக இளம் நடிகர்களுக்கு படம் இயக்க ஆர்வம் ஏற்படுவது சகஜம். ஆனால், தனுஷ் குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக எல்லோருமே படம் இயக்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தனுசுக்குள் இருந்து வந்த இயக்குனர் ஆர்வம், தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. சொந்தமாக ஒரு கதையை தயார் செய்துவைத்துள்ள தனுஷ், அடுத்த ஆண்டின் இறுதியில் இயக்குனர் அவதாரம் எடுப்பது உறுதியாகி விட்டதாம். இதற்காக நாயகன், நாயகியையும் தேர்வு செய்து வைத்துள்ளார். அந்த நடிகரின் நடிப்பில் திருப்தி இல்லாத பட்சத்தில், தனுஷே ஹீரோ அவதாரமும் எடுப்பாராம்.
இதற்கிடையே, தனுசின் மனைவி ஐஸ்வர்யாவும் படம் இயக்குவது குறித்து தொழிற்நுட்பங்களை கற்று வருகிறாராம். அடுத்த வருடம் தனுஷ் படம் இயக்கும் போது, இணை இயக்குனராக பணிபுரிவாராம்.
ஏற்கனவே, தனுசின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவனுடன் இணைந்து சோனியா அகர்வாலும் டைரக்ஷன் பற்றிய தொழிற்நுட்பங்களை கற்று வருகிறாராம். தனுசின் தந்தை கஸ்தூரி ராஜா பிரபலமான இயக்குனர் என்பதும், ஐஸ்வர்யாவின் சகோதரி சவுந்தர்யா ரஜினியின் 'சுல்தார் தி வாரியர் அனிமேஷன்' படத்தை இயக்கி வருவதும் தெரிந்த விஷயம்.
Labels:
Danush
Subscribe to:
Posts (Atom)