CINEMA NIRUBAR WELCOMES YOU

2009-06-08

சிம்புவுடன் காதலா? : த்ரிஷா பரபரப்பு பேட்டி


சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் காதல் என்று கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதற்கு த்ரிஷா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது :-

எனக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாக சிலர் வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதுபற்றி நான் பல தடவை விளக்கம் அளித்து விட்டேன். ஆனாலும் இந்த வதந்தி நின்ற பாடில்லை.
சினிமாவில் எனக்கு வேண்டாத சிலர்தான் என்னைப் பற்றி அடிக்கடி கிசுகிசு பரப்பி வருகிறார்கள். கிசுகிசு மூலம் என் மார்க் கெட்டை குறைத்து விட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். அவர்களது இந்த எண்ணம் ஈடேறாது.
நான் இதுபோல் எத்த னையோ சர்ச்சைகளைப்பார்த்து விட்டேன். தொடக் கத்தில் இந்த மாதிரி சர்ச்சை- வதந்தியை கிளப்பிய போது மிகவும் பயந்து போனேன். ஆனால் தற்போது அதை பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
நல்ல விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்வேன். தீயவிமர்சனம் என்றால் கண்டுகொள்ளமாட்டேன்.
சமீபகாலமாக சில ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு கோவில் கட்டுகிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கடவுளுக்கு மட்டும்தான் கோவில் கட்ட வேண்டும். நடிகைகளுக்கு கோவில் கட்டுவது கடவுளை கேவலப்படுத்துவது போல் உள்ளது. எனவே ரசிகர்கள் நடி கைகளுக்கு பதில் தங்களுக்கு பிடித்த கடவுளுக்கு கோவில் கட்டலாம்.
தற்போது என்னிடம் ஒரு சிலர் எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?Ó என்று கேட்கிறார்கள். நான் தற்போது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை. நடிப்பில்தான் அதிககவனம் செலுத்தி வருகிறேன். சினிமா வில் சாதித்த பிறகு தான் திருமணம் செய்வேன். எனது கணவர் அதிகம் சம்பாதிப்ப வராக இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. அவர் நல்ல மனிதராக என் கருத்துக்கு மரியாதை தருபவராக இருந்தால் போதும்.

சுயசரிதை எழுதுகிறார் ஸ்லம்டாக் ரூபினா அலி


ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரூபினா அலி, தனது வாழ்க்கையை சுய சரிதமாக எழுதி வெளியிடப் போகிறாராம். 9 வயதே நிரம்பிய சிறுமியான ரூபினா, பிறந்தது, வளர்ந்ததெல்லாம் வறுமை நிறைந்த மும்பை சேரி பகுதியில்தான். இந்த 9 வயதுக்குள் அவருக்கு நேர்ந்த அனுபவங்களையே தனிப் புத்தகமாக்கி பிரபல டிரான்ஸ்வேர்ல்டு பதிப்பகத்தார் வெளியிடப் போகிறார்கள். இந்தப் புத்தகம் மூலம் வரும் பணத்தில் சிறுமி ரூபினாவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக பதிப்பகத்தார் கூறியுள்ளனர். 'ஒரு சேரிச் சிறுமியின் கனவு: நட்சத்திரங்களுக்குள் என் பயணம் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.