CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-27

ரஜினியை வம்புக்கு இழுத்த சிம்பு : பட விழாவில் பரபரப்பு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சிலம்பரசன் வம்புக்கு இழுத்துள்ளார். குசேலன் படத்தின் தோல்வியை மறைமுகமாக சுட்டிக்காட்டிய சிம்பு, ரஜினி அந்த விழாவுக்கு வரவில்லை என்பதை ஏளனமாக பேசினார். இதனால் பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் மோகன் பாபுவின் மகன் நடிகர் மனோஜ்குமார் நடித்துள்ள படம் என்னை தெரியுமா? இந்த படத்தின் விழா நடந்தது. இதில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், என்னை தெரியுமா? படத்தின் நாயகன் மனோ‌ஜ்குமா‌ர் எ‌ன்னுடைய ந‌ண்ப‌ர். அதனா‌‌ல் ‌விழாவு‌க்கு வ‌ந்‌திரு‌க்‌கிறே‌ன். ஆனால் மனோஜ்குமாரின் தந்தையின் நெரு‌ங்‌கிய ந‌ண்ப‌ர் ர‌ஜி‌னி இந்த விழாவுக்கு வரவில்லை என்றார். ரஜினியையும், தன்னையும் ஒப்பிட்டு பேசிய சிம்பு, ஒரு கட்டத்தில் பெ‌‌ரிய ஹ‌ீரோவாக இரு‌ந்தாலு‌ம் கதை‌யிரு‌ந்தா‌ல்தா‌ன் பட‌ம் ஓடு‌ம், என்று விரலை நீட்டி பேசினார். சிம்பு ரஜினியை மீண்டும் மீண்டும் தாக்கி பேசியதைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

4 comments:

கிரி said...

எல்லாம் நேரம்டா சாமி..

nanu said...

super starukku little super star aaappu

nanu said...

super starukku little super star aappu

Unknown said...

this is really bad. If some one is silent then it is all over. why rajini is so silent
?

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!