CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-31

குசேலன் சர்ச்சையால் உஷாரானார் விஜய்

குசேலன் சூடு பல்வேறு பஞ்ச் நாயகர்களையும் கதிகலங்க வைத்திருக்கிறது. இதில், ரொம்பவே உஷாராகி இருப்பவர் விஜய். குருவி கிளப்பிய பீதியில் இருந்து அவர் இன்னும் விடுபடாத நிலையில் தற்போது தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார் விஜய். அந்த சில நிமிட காட்சியிலும் கூட அனல் பறக்கும் சில பஞ்ச் வசனங்களை அள்ளி விடுகிறாராம். என்னுடைய அப்பா என்னை ஆம்பளையா மட்டும் வளர்க்கலை. கொம்பு சீவிய காளையாவும் வளர்த்திருக்கிறார் என்பது பொறி பறக்கும் ஓர் பஞ்ச் டயலாக். எனினும், தனது கேரக்டரை ஓவர் பில்டப் செய்து குசேலன் கதையாகிவிடக் கூடாது என்பதால், படம் வெளிவரும் வரை தனது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை வெளியிடக்கூடாது, விஜய் படம் என்பது போல் விளம்பரம் செய்யக்கூடாது என்று நிபந்தனைகளை விதித்திருக்கிறாராம் விஜய்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!