CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-13

சிம்ரன் கணவர் மாயம்

Actress Simran
ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். தனது சிலிம்மான இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவதில் சிம்ரனுக்கு நிகர் சிம்ரன்தான். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லி மும்பை பக்கம் போன சிம்ரன், மீண்டும் சின்னத்திரை மூலமாக கோடம்பாக்கத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

ரீ&எண்ட்ரி ஆனபோது சிம்ரனுடன் அவரது கணவர் தீபக்கும் சூட்டிங் ஸ்பாட்களுக்கு வந்தார். ஆனால் இப்போதெல்லாம் ஆளையே காணும். சிம்ரனின் கணவர் மாயமானது ஏன் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தால், பலரும் பல மாதிரி சொல்கிறார்கள். அதில் ஒன்று சூர்யா நடிகரை வைத்து தற்போது ஆயிரம் என்று முடியும் ஒரு படத்தை இயக்கி வரும் இயக்குனருக்கு தீபக் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது பிடிக்க வில்லையாம். இதனை சிம்ரனிடம் வெளிப்படுத்த, சிம்ரன் தனது கணவரிடம் வெளிப்படுத்த... ஆள் எஸ்கேப் ஆயிட்டார், என்கிறார்கள். சிம்ரனிடம் கேட்டால், தீபக் ரொம்ப பிஸி... என்று ஒரே வரியில் சொல்லி முடித்து விடுகிறார்.

2 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!

Venkateshan.G said...

இந்த செய்தியால் ,நம் நாட்டில் இனி பஞ்சம் ,பட்டினி சுத்தமாக அகன்று விடுமா ?.................. என்னமோ பொய்ங்க ........... நாம் உருபடரமாதிரி பாருங்க

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!