CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-15

மணிரத்தினத்துக்கு சிம்ரன் தூது

Actress Simran
உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு தருமாறு டைரக்டர் மணிரத்தினத்திற்கு நடிகை சிம்ரன் தூது அனுப்பியிருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த சிம்ரன் தற்போது தமிழில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார். சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்ரன் அடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கு காரணம் அம்மணிக்கு படம் இயக்கும் ஆசை வந்து விட்டதுதானாம்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஆரம்பத்தில் இருந்தே சினிமா இயக்குவதில் எனக்கு ஆசை இருக்கிறது. எப்படியாவது ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும். சினிமா இயக்குவதற்கு கொஞ்சம் முன்அனுபவம் தேவை என்பதை நானறிவேன். இதற்காக டைரக்டர் மணிரத்தினத்தினம் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அவரிடம் இருந்து சாதமான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன், என்றார்.

2 comments:

கிரி said...

கோபம் வந்தா கேமரா முன்னாடி திட்ட மாட்டாங்களே :-))))

Joe said...

"sadhagamaana"-nu vandhirukkanum...

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!