CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-09-09

பிராமண சமூகத்தை அசிங்கப்படுத்துகிறதா தனம்?


டைரக்டர் ஜி.சிவா இயக்கத்தில் உருவாகி, வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் தனம். இந்த படத்தில் நடிகை சங்கீதா விபச்சாரியாக நடித்திருக்கிறார். விபசாரம் செய்யும் பெண்கள், கஸ்டமர்களை கவர என்னவெல்லாம் செய்கிறார்களோ... அதை அச்சு அசலாக அசத்தலாக நடிப்பில் வெளிக்காட்டியிருக்கிறார் சங்கீதா. இதனால் இந்த படத்துக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. படத்தின் கதைப்படி நாயகியான தாசி சங்கீதாவை, பிரமாண சமூகத்தை சேர்ந்த ஹீரோ காதலிக்கிறார். ரூ.500 கொடுத்தாலே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள தயார் என்று சொல்லும் விபச்சார பெண்ணிற்கு தனது காதலை புரியவைத்து, அவர் போடும் கண்டிஷனையும் ஏற்று சங்கீதாவை அக்ரஹாரத்து மருமகளாக்குகிறார். அதன் பின்னர் ஜோதிடத்தை நம்பி சங்கீதாவின் குழந்தையை கொல்வது போல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி ஒட்டுமொத்த பிராமண சமூகத்தையும் கொச்சைப்படுத்துவதுபோல இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுபற்றி படத்தின் டைரக்டர் சிவாவிடம் கேட்டபோது, தனம் என்பது ஒரு சினிமாதான். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். சினிமாவை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாது? தனம் படம் வெளியான பின்னர் முகம் தெரியாத நபர்களெல்லாம் தொலைப்பேசியில் மிரட்டுகிறார்கள், என்றார்.

தனம் படத்தில் உண்மையிலேயே பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்துகிறார்களா? வாசக நண்பர்களே... பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

1 comments:

kankaatchi.blogspot.com said...

kaaitha maramthaan eppothum kalladi padum.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!