CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-04-29

ரஜினி அரசியலுக்கு வர வேண்டி கிடா வெட்டிய ரசிகர்கள்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டி மதுரையில் அவரது ரசிகர் மன்றத்தினர் கிடா வெட்டி சாமி கும்பிட்டனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணம். ஆனால் ரஜினியோ அரசியல் பக்கம் தலை வைத்து படுக்கப்போவதில்லை என்ற முடிவிலேயே பல ஆண்டுகளை கடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆட்டுக் கிடாக்களுடன் ஊர்வலம் நடத்தி, கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். மதுரை முனிச்சாலை 6வது தெருவிலிருந்து ஆடுகளுடன் ஊர்வலமாக கிளம்பிய ரசிகர்கள் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்றனர். அங்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அன்னதானமும் நடத்தப்பட்டது. ரஜினிகாந்திடம் அரசியல் பற்றி கேட்டால், எல்லாம் அவன் செயல்...! என்று கடவுளை கை காட்டி ஒதுங்கி விடுவார். அதனால்தானோ என்னவோ... ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ரசிகர்கள் கடவுளிடம் வேண்டுகிறார்கள்.

2 comments:

Anonymous said...

எஙக தலைவர் அரசியலுக்கு வருவாரான்னு கேட்டு சொல்லுங்களேன்

Anonymous said...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணம்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!